இதழ் முத்தம்




தன் எச்சில் தரை விழுந்தால்
தீண்டாத மனித நாகரிகத்தில்
இதழ் முத்தம் என்றும் வியப்பே !!!

//இதழ் முத்ததுக்கே வியப்பா’னு கேட்டுடாதீங்கோ!!!

பூமியும் ஓர் தேவதாசனோ??


காடென்னும் தாடி வளர்த்து, விழியில்

கடலெனும் கண்ணீர் சுமந்து,

ஓசோன் (ozone) சட்டை கிழித்துக் கொண்டு,

நிலவெனும் நாய் குட்டி தன்னை சுற்ற,


அல்லும் பகலும் போதையிலே
சுற்றிடுதே...

உன் பாதம் தீண்டும் சுகம்


காற்றில் மிதக்கிறேன்,
நீரில் நடக்கிறேன்,
நெருப்பில் நனைகிறேன்,
குடை பிடித்தும் மழையில் கரைகிறேன்...
குழப்பத்தில் ஏதும், புரியாமல் திரிகிறேன்...

’பட்டு’ என்றுன்னை அழைக்கிறேன்,
விட்டு எனை நீ நீங்கினால் அழுகிறேன்.

தொட்டுக் கொண்டு நகரும் நம் நிழல் கண்டு,
கொட்டும் இன்ப அருவிச் சுமந்த்து, நடக்கிறேன் நானும்,
உன் விரல் மெல்ல பற்றிக் கொண்டு.

உன் பாதம் தீண்டும் சுகம், தரைக்கு தரவும் மாட்டேன்,
உள்ளங்கை விட்டுன்னை இறக்கி விடவும் மாட்டேன்.

கள்ளம் அறியாதவளே, என்
உள்ளம் புரிந்தவளே!!!

சுகம் பல நீயும் கொள்ள,
தினம் தினம் நான் மகிழ்வேனே...

சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய்


புதியதோர் உலகம்,
சுற்றிலும் வெள்ளாடை மானிட கூட்டம்,
முகத்திரையும் கையில் உரையும் அணிந்தோரை பார்த்து,
பயந்து போனதோ என்னவோ!? பாவம்!!

உலகம் முழுதும் எதிரொலிக்க, அழுதுக் கொண்டு, ஓர்
உயிர் மண்ணில் தோன்றிற்று;

சத்தமின்றி மலர்கள் மலரும், என்பதெல்லாம் பொய் என்று நிரூபித்தது ஓர் பூவையின் பிறப்பு.


முதல் முறை பார்க்கையில், அன்னையும் அந்நியமே!

குழப்பத்துடன் பார்திருக்கையில்,
அவள் தன் பட்டு மேனியும், பஞ்சு
விரல்களும் பிடித்து,
மகிழ்ச்சி கடலில் மூழ்கினாள்.

எனக்கும் கிடைத்திடாத வரம்,
உண்மையில் அவள் தாய் தவம் செய்தவள் தான் போலும்!!!

3D text with Illustrator & Photoshop


After reading a 3D Text tutorial.
Kinda happy with the result. Hope to do more like this.. :) 'jolly'a irukkum ithu maathiri seiyum poluthu' :D

காயங்கள், எல்லாமே சுகமாகும் மாயங்கள்

Love Rose


அழகிற்கு எல்லை,
என்றொன்றும் இல்லை - என்றே
உன்னைக் கண்ட பின்னே,
எவரும் சொல்லிடுவார் பெண்ணே!!!

வாள் கொண்டு நீயும்
என் இதயம் தன்னைக் கிழிப்பாய்; பின்,
நீ சிந்தும் கண்ணீர் கண்டு, என்
வெட்டுண்ட இதயமும் துடித்திடுமே!
உடன் கண்ணீர் வடித்திடுமே!

நீ செய்திடும் காயங்கள், எல்லாமே
சுகமாய் போகும் மாயங்கள்!!!