புல் மீது

ஒரு புல்லின் நுனியில் நீ அமர்ந்திருந்தாய்,
மறு புல்லின் இடையில் நின்று உன்னை பார்த்தேன்.

ஆசை கொண்டே அருகில் வர நான் நகர்ந்தேன்,
சுமை தாங்கா புல் பாவம் மெல்ல தலை குனிய,
இக்காட்சி கலையுமென பயம் கொண்டேன்,
அசையாது அங்கேயே அமர்ந்தபடி பார்த்து கிடந்தேன்.

காலம் உறையட்டும், இந்த காட்சி தொடரட்டும்