சபதம் நிறைவேறியது !!

"என்னை எரித்த உன்னை சும்மா விட மாட்டேன்,

உன் மகனை வைத்தே உன்னை எரிப்பேன் இது என் மீது சத்தியம்!!...";

-சபதம் நிறைவேறியது என்று

புன்னகைக்கிறது 'புகையிலை',

கல்லரை ஓரமாய் கரும் புகை வீசி...



காணிக்கை...!!!

"எனக்கு வீடு கட்ட வேண்டும்;

என் பிள்ளைகளை அனுப்புகிறேன்,

அவர்களிடம் பணம் கொடுத்து அனுப்பு...", என்று

கடவுள் என்னிடம் சொல்லட்டும்,

நிச்சயமாய் கொடுக்கிறேன்,

இரண்டு ரூபாய்கள்,

காணிக்கையாக.!!


பசி..

இருக்கிறவன்,
இல்லாதவன்
என்று இல்லாமல்,
இருக்கின்ற எல்லாருக்கும் இருக்கும்;....
பசி



அரசியல்வாதிகள் நேர்மையானவர்களே.

உண்மை கலந்திடாத தூய பொய்களை,
துணிந்து உரைத்திடும் அரசியல்வாதிகள்

நேர்மையானவர்கள்;

வெற்றி பெறும் கட்சிகளை,

விரைந்து சென்று ஒட்டி கொள்ளும் அரசியல்வாதிகள்

நேர்மையானவர்கள்;

படிக்க தெரியாவிட்டலும்,

படித்தவர்களையும் ஏமாற்றும் வண்ணம் பேசத் தெரிந்த அரசியல்வாதிகள்

நேர்மையானவர்களே!!!!..

நேர்மையில் நிமிர்ந்து நிற்கும் அவனை

வளைத்திட எவனால் முடியும்??



அடியாட்களின் கோட்டை

ச_ _ மன்றம்!!!!

அதிகாரமும் அங்கிகாரமும் கொண்ட

அடியாட்களின் கோட்டை.......



ஏன் அய்யா சிரிக்கின்றாய்??


ஏன் அய்யா சிரிக்கின்றாய்??


'உன் படம் பதித்த பணமின்றி இந்நாட்டில்,


ஒரு முடியும் மடங்காது' என்று ஏளனமா???






நீங்கள் சொன்னதெல்லாம் பொய் தானோ??!

தூணிலும் இருப்பான்!

சிறு துரும்பிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு ,

ஏனடா வணங்குவதற்காக, 'சிலைகள்' வடித்தாய் ??????

முட்டாள் மானிடா!!!!....

உன்னிலும் இருப்பான்!

உன் கண்ணிலும் இருப்பான்!

என்று உரைப்பாயே,

பின்பு,

ஏனடா கடவுளுக்காக, 'கோவில்கள்' கட்டினாய்??????

குருட்டு மானிடா!!!!..

ஒரு வேளை...

"நீ சொன்னதெல்லாம் பொய்"

என்று நிரூபிக்க தானோ??!!



கையில் ஆயுதம் ஏந்தி வாடி!!

கொள்கைகள் கொட்டிக் கிடக்குதிங்கு கோடி


கடைப்பிடிக்க ஒருத்தனும் இல்லை போடி;


உரிமை என்றால் உரக்க குரல் கொடுக்குறான்டி,


கடமை என்றால் கடையினில் ஓடி ஒழியுறான்டி;



ஈழத்தின் இடுப்பை ஒருவன் ஒடிக்குறான்டி,



தாயகம் திரும்புவோரை இவன் ஏளனமாய் நடத்துறான்டி;



நாளொரு கட்சி இங்கு தோன்றுதடி,



நாகரிகம் அறியாதவனெல்லாம் அதில் தலைவனான்டி;



ஆட்சியை அமைக்க ஆயிரம் சொல்லுறான்டி ,


அமைந்ததும் அதில் எதை இவன் செய்யுறான்டி?



அரசியல் உலகின் அடிப்படையாய் திரைத்துறையாச்சுதடி,


வருகிறவனெல்லாம் மக்களிடம் நல்லாவே நடிக்கிறான்டி...


வரி செலுத்த எல்லாரும் வரமாட்டேன்கிறான்டி



விலைவாசி விவசாயி முதுகெலும்பை முறிக்குதான்டி;



'கடவுள்' கதை சொல்பவன் கால்களில் விழுகிறான்டி,

சாதகம், சோதிடம்னு சிக்கி அழியுறான்டி;



எதையும் யோசிக்கவே யோசிக்கிறான்டி,


சோதிடனின் யோசனை மட்டும் யாசிக்கிறான்டி;



'மூடன்' என்றால் முறைக்குறான்டி

பகுத்தறி(வு) என்றால் பகைக்குறான்டி;

என்றும் இவன் திருந்தமாட்டான்டி



திருடர் கூட்டம் இவனை திருந்த விடமாட்டான்டி;


புதியதோர் உலகம் படைத்திட நீ வாடி!


திருடர் கூட்டம் தீயில் கருகிட,கையில் ஆயுதம் ஏந்தியே நீ வாடி!!!..

நெஞ்சு விரும்புதில்லையே....

பஞ்சு தலையணைகளை நெஞ்சு விரும்புதில்லையே,

வாழ வழி இல்லா மக்கள் இங்கு,

நாற்றம் வீசும் நடைபாதைகளை

வழி மறித்து வாழ்க்கை நடத்துகையிலே.







உயிரும் உடைமையும்

எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்

என்று அறிந்தவனில்லை,

அதுஎங்கே செல்லும் எப்படி செல்லும்

அதை புரிந்தவனுமில்லை,

தன்னுடையதென சொந்தம் கொண்டாட

மறப்பதும் இல்லை,

அதற்காக

கொலையும் செய்ய

மனம் மறுப்பதில்லை

இதில்

ஒன்றின்றி ஒன்று

நிலைப்பதுமில்லை,

நிலைப்பதில்

எந்த பயனும் இல்லை…..

மகானாயினும் மந்திரியாயினும்..

மாட்டிக் கொள்ளும் வரை தான்

மதிப்பும் மரியாதையும்,

மகானாயினும் மந்திரியாயினும்... ..

பாலா(ழா)ய்ப் போகும் பணம்:

கஞ்சிக்கும் வழியின்றி தன்

குடும்பம் கதறும் சத்தம் கேட்டும்

கேளாமல்

‘கட் அவுட்’டிற்கு

பாலாபிஷேகம் செய்கிறான்,

தன்னை அறியாத தலைவனுக்காக

தன் தலை விதி

மறந்தே!!!!!!!

பாழாய் போகிறதே

மூடணின் பணம்

பாலாய்

போகிறதே!!!!!!!!!!!!!