Showing posts with label Philosophy. Show all posts
Showing posts with label Philosophy. Show all posts

மண்ணுன்னும் உடல்

 மண்ணுன்னும் உடல் இங்கு
 மணிக்கொரு சுகம் வேண்டும்

 மக்கிடும் உடல் இங்கு
 மாதம் புது வகை தேடும்

 சாம்பலாகும் உடல் இங்கு
 தன் சூட்டால் மனம் கருக்கும்

 அழுகிடும் உடல் இங்கு
 அருந்திடும் உறவு நாடும்

 நழுவிடும் உயிர் இங்கு
 இன்று ஒரு நாள் உடல் தங்கும்.

பசி..

இருக்கிறவன்,
இல்லாதவன்
என்று இல்லாமல்,
இருக்கின்ற எல்லாருக்கும் இருக்கும்;....
பசி



உயிரும் உடைமையும்

எங்கிருந்து வரும் எதிலிருந்து வரும்

என்று அறிந்தவனில்லை,

அதுஎங்கே செல்லும் எப்படி செல்லும்

அதை புரிந்தவனுமில்லை,

தன்னுடையதென சொந்தம் கொண்டாட

மறப்பதும் இல்லை,

அதற்காக

கொலையும் செய்ய

மனம் மறுப்பதில்லை

இதில்

ஒன்றின்றி ஒன்று

நிலைப்பதுமில்லை,

நிலைப்பதில்

எந்த பயனும் இல்லை…..

மகானாயினும் மந்திரியாயினும்..

மாட்டிக் கொள்ளும் வரை தான்

மதிப்பும் மரியாதையும்,

மகானாயினும் மந்திரியாயினும்... ..