வெள்ளை நிறத்தொரு வானம் கண்டேன், அதில்
கார்குழல் நிறத்தொரு நிலவும் கண்டேன்.
மெதுவாய் விழி நீ,
மூடும் பொழுதே தேய் பிறையாம், கண்
திறந்திடும் பொழுதும் வளர் பிறையாம்.
முழு நிலவொன்று தோன்றலும் மறைதலும்
உன் விழியினில் கண்டே வியந்து நின்றேன், நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு நொடியும்.
இத்தனை அழகும் பிரதி எடுத்தார் போல் உன் மறு விழியும் கண்டு
'பொத்'தென நானும் மயங்கி விழுந்தேனே,
கடற்கரையிலும்...
காதல் கரையிலும்...